Sunday, May 24, 2009

வண்ணத்துப்பூச்சி வேட்டை

என் நினைவுக்கு எட்டிய வரை "வண்ணத்துப்பூச்சி வேட்டை" தான் நான் ஒரே மூச்சில் படித்து முடித்து கதை. அதை படித்ததும் சுஜாதா மேல் எனக்கு இருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.

கதை என்று எடுத்தக் கொண்டால் ஏறக்குறைய ஒரு மெகா சீரியல் போலத் தான். ஆனால் அதை ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லி இருப்பது என்னை பிரமிக்க வைத்தது. முதல் பக்கத்திலேயே ரேகாவை பிடித்து போனது, அதே போல் பணம் சேர்க்கும் லட்சியத்தைப் பற்றி பேசியவுடனே அர்ஜுன் மேல் வெறுப்பு ஏற்பட்டது. அரை நிஜார் போட்டுத் திரிபவர்களைக் கண்டால் சுஜர்தாவுக்கும் பிடிக்காது போல் இருக்கிறது :)

இரண்டு மூன்று அத்தியாயங்கள் தாண்டுவதற்குள் ரேகாவின் அவஸ்தைகளை எல்லாம் உணர முடிந்தது. அவளை மாமனார் மாமியாரிடம் மன்னிப்பு கேட்க சொன்ன போது கோவத்தில் புத்தகத்தை விசிறி அடித்தேன். அர்ஜுன், ரேகாவை அடித்த போது எனக்கும் வலித்தது போல் இருந்தது. இந்த அளவு ஈடுபாட்டை வேறு எப்போதும் நான் அனுபவித்தது இல்லை.

பெண் ஆசிரியர்களின் கதைகள் நிறைய படித்துள்ள என் அம்மாவை இந்த கதையையும் படித்து, யாருடைய கதை உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது என்று கேட்க வேண்டும்.

இறுதியில் ஈடுபாது குறைந்து போனதற்கு, கதையை ஊகிக்க முடிந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். நிஜ வாழ்வை பொறுத்த வரை, அர்ஜுனை போல், சதா பணத்தை துரத்தும், இரட்டை வாழ்க்கை வாழும் ஆசாமிகளை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் ரேகாவை போன்ற பெண்கள் இன்றும் இருக்கிறார்களா? நான் பார்த்த வரையில் பெண்கள் எல்லோரும், தங்கள் கல்யாண பத்திரிக்கையின் நிறத்தில் இருந்து, தேன் நிலவு செல்லும் இடம், பிள்ளை பெற்றுக்கொள்ள போகும் வயது வரை அனைத்திலுமே தெளிவாகவே இருக்கிறார்கள்.

0 Comments:

Post a Comment

<< Home

Blogarama - The Blog Directory Personal Blogs by Indian Bloggers